எதிர்பார்த்தபடி மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணை அறிக்கையின் முழுப்பகுதிகளும் தனக்குக் கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இதன் பின்னணியில் சிறு பகுதியியைத் தாம் வெளியிடப் போவதில்லையெனவும் முழுமையான அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அது சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கரு மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக C350 - C360 பகுதி ஆவணங்கள் மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ள அதேவேளை ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ நாடாளுமன்றுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குரல் எழுப்பப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment