ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டாட்சியிலிருந்து விலகுவதற்கு எந்நேரமும் தயாராகவே இருப்பதாக தெரிவிக்கின்ற அக்கட்சியின் புதிய செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஆனாலும் உடனடியாக விலக முடியாதமை குறித்து விளக்கமளித்துள்ளார்.
குரூப் 16 மற்றும் மஹிந்த அணியினர் சு.க கூட்டாட்சியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறு விலகினால் ஐக்கிய தேசியக் கட்சி பலம் பெற்றுவிடும் எனவும் அதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் கட்சித் தலைவர்கள் மைத்ரி மற்றும் ரணில், கூட்டாட்சி 2020 வரை தொடரும் என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment