கடந்த சில வருடங்களாக இலங்கையில் ரமழான் மாதம் மற்றும் நோன்புப் பெருநாள் பிறை தொடர்பில் பாரிய சர்ச்சைகள் உருவாகியிருந்த நிலையில் இனி வரும் காலங்களில் பிறை குறித்த அறிவிப்பை முஸ்லிம் விவகார அமைச்சு பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஹலீம்.
அவரது ஊடக செயலாளர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விவகாரத்துக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் பொறுப்பாகவிருப்பார் எனவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment