ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வெலிக்கடை அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் காவியுடையிலேயே அங்கிருக்க அனுமதித்து அவரது கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் விமல் வீரவன்ச.
சிறைச்சாலை சீருடையை அணிய முடியாது என தெரிவித்துள்ள ஞானசார, தானே கொண்டு சென்ற வெள்ளை ஆடையை அணிந்துள்ள அதேவேளை காவியுடை களைந்துள்ளார்.
எனினும், அவர் பௌத்த துறவியென்பதால் அந்த கௌரவத்தை வழங்க வேண்டும் என விமல் வீரவன்ச ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment