புதிய செயலாளர்: தயாசிறி முழு 'திருப்தி'! - sonakar.com

Post Top Ad

Sunday 3 June 2018

புதிய செயலாளர்: தயாசிறி முழு 'திருப்தி'!


தமது கட்சிக்கு முதற்தடவையாக புத்திஜீவி ஒருவர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து தாம் முழு அளவில் திருப்தியடைவதாக தெரிவித்துள்ளார் தயாசிறி ஜயசேகர.



ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்ததன் பின்னணியில் குரூப் 16 உறுப்பினர்கள் அரசிலிருந்து விலகியிருந்த நிலையில் தமது கட்சிக்குள்ளும் மாற்றங்கள் வர வேண்டும் என கோரி வந்தனர்.

இந்நிலையில், இன்று தற்காலிக கட்சி நிர்வாகம் நியமிக்கப்பட்டு புதிய செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தே திருப்தி வெளியிட்டுள்ள தயாசிறி, சு.க ஒன்றிணைந்து பயணிக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment