இலங்கையின் எப்பாகத்திலும் வியாழன் இரவு வரை பிறை தென்படாத காரணத்தினால் நாளை ரமழான் நோன்பிருத்தல் தொடரும் என ஜம்மியத்துல் உலமா மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஒரு பகுதி, இந்தோனேசியா போன்ற இடங்களில் பிறை காணப்பட்டுள்ளதன் பின்னணியில் சில நாடுகளில் ஏலவே நாளைய தினம் பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சவுதி - ஐக்கிய அரபு அமீரக உத்தியோகபூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையிலும் இன்று பிறை தென்படக்கூடும் என பரவலான பேச்சுக்களும், வாத விவாதங்களும் இடம்பெற்று வந்தது. எனினும், இன்று நாட்டின் எப்பாகத்திலும் பிறை தென்படவில்லையென உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் நாளை 29வது நோன்பு அனுஷ்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை வெள்ளிக்கிழமையும் பிறை தென்படாதவிடத்து ரமழான் மாதம் 30 நாட்களாக பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment