மலேசியா, Kota Kinabalu பள்ளிவாசல் மதிலில் ஏறி தூர கிழக்கு ஆசிய நாடொன்றைச் சேர்ந்த இரு பெண்கள் நடனமாடி சர்ச்சையை உருவாக்கியதன் பின்னணியில் பள்ளிவாசல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் குறித்த காணொளி வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் இவ்வாறு தற்காலிக தடையை அறிவித்துள்ளது.
சபா மாநிலத்தின் தலை நகர் , சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களுள் ஒன்றாகும். குறித்த பெண்களின் துர்நடத்தையால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment