கல்முனை மின்சார சபையின் இப்தார் நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Thursday 7 June 2018

கல்முனை மின்சார சபையின் இப்தார் நிகழ்வு

எல்லா சமூகத்தினரும் இணைந்து பணிபுரியும் மின்சாரசபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவு ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பிராந்திய பிரதம மின்பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் 2018-06-07 ஆம் திகதி இடம்பெற்றது.

வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வில் அஷ்செய்க் ஏ.எம்.மஹ்றுப் (றஹீமி) அவர்கள் விஷேட மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்வுக்கு அம்பாறை பிராந்திய பிரதம மின்பொறியியலாளர் ஏ.எம்.ஹைகல்,கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.கே.ஜெயநித்தி, கல்முனை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஏ.எல்.எம்.வாஹீத் (ஐ.பி) மற்றும் கல்முனை, அம்பாறை மின்பொறியியலாளர் பிரிவுகளில் இருந்து உயர் அதிகாரிகள் பிரதேச முக்கியஸ்தர்கள் மின்சாரசபையின் ஓய்வுபெற்ற மற்றும் கடமையில் இருக்கும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
-எம்.வை.அமீர்

No comments:

Post a Comment