ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்றுக்குள் புகுந்து மிரட்டிய குற்றச்சாட்டில் பொது பல சேனா பயங்கரவாதி ஞானசாரவுக்கு ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றுக்குள் புகுந்து அடாவடித்தனம் புரிந்த ஞானசாரவுக்கு நீதிமன்ற அவமதிப்புக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அண்மையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2008 தலஹேன தேவாலய தாக்குதலின் பின்னான தங்க நகை அபகரிப்பு வழக்கு விசாரணை நவம்பரில் இடம்பெறவுள்ளமையும் அரசுடன் நல்லுறவைப் பேணும் ஞானசார உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவாரா எனும் சந்தேகம் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment