ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் 20ம் சட்டத்திருத்தப் பிரேரணை ரணில் விக்கிரமசிங்கவின் நலன் காக்கும் அடிப்படையிலானது என தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சி நா.உ பிரசன்ன ரணதுங்க.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குத் தாம் ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருக்கின்ற போதிலும் ஜே.வி.பி கொண்டு வந்திருக்கும் பிரேரணை ரணிலுக்கு ஆதரவானது என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரசன்ன - டலஸ் அணிகள் உருவாகி பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment