மாகந்துரே மதுஷ் என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழியின் முக்கிய சகா திலக் என அறியப்படும் மானெல் ரோஹன எனும் நபர் விசேட அதிரடிப்படையினரால் இன்று மாலை மாத்தறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டாட்சியில் தினசரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமுற்ற நபரை வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment