மிக் விமானக் கொள்வனவு மோசடி மற்றும ஆயுத விற்பனை விவகாரங்களுக்காகத் இலங்கை அரசு கைது செய்யக் காத்திருக்கும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க விரைவில் நாடு திரும்புவார் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
இலங்கை அரசு தேடி வருவதாக தெரிவிக்கின்ற போதிலும் மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களின் போது உதயங்க அவரைச் சந்தித்து வந்தார். இந்நிலையில் அண்மையில் துபாயில் கைதான உதயங்கவை நாட்டுக்கு அழைத்து வர அரசு பாரிய முயற்சிகளை செய்து வருகிறது.
தாம் உட்பட பலர் உதயங்கவுடன் பேசியுள்ளதாகவும் அவர் விரைவில் நாடு திரும்புவார் எனவும் மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment