சீகிரிய: சக பயணியிடம் பணத் திருட்டு: சீன பெண் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday 20 June 2018

சீகிரிய: சக பயணியிடம் பணத் திருட்டு: சீன பெண் கைது!


இலங்கைக்கு சுற்றுலா வந்த சீன பிரஜைகள் குழுவொன்றில் இடம்பெற்ற பணத் திருட்டு சம்பவம் ஒன்றின் பின்னணியில் 25 வயது சீன  பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



168,000 ரூபா இலங்கை நாணயமும் வெளிநாட்டு நாணயத்தாள்களும் திருடப்பட்டுள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுலாப்பயணிகள் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் பேருந்தில் வைத்து இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment