பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் எனக் கோரும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பாத யாத்திரை ஒன்றை நடாத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் போதியளவு திருப்தியாக அமையவில்லையென குறை வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் தென் மாகாண சபை உறுப்பினர் டி.வி.கே. காமினி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய தலைமையுடன் பயணித்து தேர்தலை வெல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment