சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்கம் விளைவிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்து வரும் நிலையில் மலிக் சமரவிக்ரமவை பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் பந்துல குணவர்தன
அரசாங்கம் தந்திரமாக நடந்து கொள்வதாகவும் ஆங்கிலத்தில் மாத்திரமே தற்போது விபரங்களை வெளியிட்டிருப்பதாகவும் இதனால் பொது மக்களுக்கு இது தொடர்பில் விளக்கக்குறைவு காணப்படுவதாகவும் தெரிவிக்கின்ற அவர், ஜனாதிபதி உடனடியாக இதனை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், சர்வதேச வர்த்தக வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் வகையிலேயே இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருவதாக அரசு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment