நீதிமன்றுக்கு சமூகமளிக்கத் தவறியதன் பின்னணியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி - மகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
வணக்கஸ்தலம் ஒன்றில் பொண்ணொருவரை அச்சுறுத்திய விவகாரத்தின் பின்னணியில் தொடரப்பட்ட வழக்குக்கு சமூகமளிக்கத் தவறியதனால் கடந்த வாரம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த இருவரையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment