சவுதி: ஈரானில் ஆயுத பயிற்சி பெற்ற நால்வருக்கு மரண தண்டனை! - sonakar.com

Post Top Ad

Thursday 7 June 2018

சவுதி: ஈரானில் ஆயுத பயிற்சி பெற்ற நால்வருக்கு மரண தண்டனை!


ஈரானில் ஆயுதம், வெடிமருந்து தயாரிக்கு முறைமை மற்றும் தாக்குதல் பயிற்சி பெற்ற நால்வருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த நபர்கள் அங்கு ஆயுத பயிற்சி பெற்றுள்ளதோடு, வெடி மருந்துகளைத் தயாரித்து உள்நாட்டில் பல கொலை நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு சவுதி இளைஞர்களை ஈரானுக்கு அனுப்பி வைக்கும் பயண முகவர் அலுவலகமும் மூடப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment