பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் கைது! - sonakar.com

Post Top Ad

Friday 8 June 2018

பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் கைது!


குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தி வீடொன்றை இடித்துத் தகர்த்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


குறித்த நபர், அமைச்சு வாகனம் ஒன்றை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாகி சேதமான வாகனத்துக்குள்ளிலிருந்து வாள் ஒன்றும் மதுபானமும் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குரல் எழுப்பி ரங்கே பண்டார அண்மையில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment