500 நாட்களில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க வேண்டும்: டலஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday 24 June 2018

500 நாட்களில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க வேண்டும்: டலஸ்!


எஞ்சியிருக்கும் மாகாண சபைகளின் பதவிக்காலமும் விரைவில் முடிவுற உள்ள நிலையில் 500 நாட்களில் ஜனாதிபதி தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் டலஸ் அழகப்பெரும.


எனினும், நடைமுறை அரசு தேர்தல்களை பின் போடுவதிலேயே குறியாக இருப்பதாகவும் தேர்தல் அறிவிப்புகள் வருவது சந்தேகமே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளின் எல்லை நிர்ணயம் இன்னும் முடிவுறவில்லையென தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் தேர்தல் அறிவிப்பு காலதாமதமாகும் என அவர் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment