ஜுலை 4 முதல் ஊழல் விசாரிப்புக்கான விசேட நீதிமன்றம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 13 June 2018

ஜுலை 4 முதல் ஊழல் விசாரிப்புக்கான விசேட நீதிமன்றம்!



மஹிந்த அரசின் ஊழல் விசாரணைகளைத் துரிதப்படுத்தும் வகையில் விசேட உயர் நீதிமன்றம் ஜுலை 4ம் திகதி முதல் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் பலர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்ற போதிலும் ஆட்சி மாற்றத்தின் பின் காத்திரமான விசாரணைகளோ நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஆளுந்தரப்பு படு தோல்வியைச் சந்தித்திருந்தது.


இந்நிலையில் அடுத்த தேர்தலுக்கு முன்பாக விசாரணைகளை நிறைவு செய்யும் வகையில் விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment