3000 இராணுவத்தினரைக் கோரும் சரத் பொன்சேகா! - sonakar.com

Post Top Ad

Sunday 3 June 2018

3000 இராணுவத்தினரைக் கோரும் சரத் பொன்சேகா!


வனஜீவராசிகளை பாதுகாக்கும் தனது திட்டங்களைச் செயற்படுத்த 3000 இராணுவத்தினரை தனது அமைச்சின் பொறுப்பில் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் சரத் பொன்சேகா.



பல கிராமங்களில் காட்டு யானைகளினால் அழிவுகள் ஏற்படுகின்ற அதேவேளை யானைகளுக்கு மனிதர்களால் பாதிப்பு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தகுந்த செயற் திட்டத்தின் மூலம் வன ஜீவராசிகள் நலன் காக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற தருணத்தில் மஹிந்த தரப்பிடமிருந்து மிருகங்களைக் காக்கப் போவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment