அர்ஜுன் அலோசியசின் நிறுவனத்திடமிருந்து 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக முதலில் தான் சொல்லவில்லையென குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார் அமைச்சர் தயாசிறி ஜயசேகர.
கபே அமைப்பு தெரிவித்த கருத்தையே தான் மீளுரைத்ததாகவும் தான் முதலில் சொல்லவில்லையெனவும் தெளிவுபடுத்தியுள்ளதாக தயாசிறி தெரிவிக்கின்ற அதேவேளை, தயாசிறிக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் ரூபா தொடர்பிலும் விசாரிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விவகாரம் தனக்குத் தெரியாது என தயாசிறி மறுதலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment