கூட்டாட்சியில் மீண்டும் இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட ஆரம்பித்ததிலிருந்து அதற்கான கிராக்கி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், மாதாந்தம் சராசரியாக 1000 விண்ணப்பங்கள் வருவதாக தெரிவிக்கிறது.
எனினும், விண்ணப்ப முடிவுகளை அறிவிக்க நீண்ட காலம் எடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மாதாந்தம் 800 பெருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்வோர் இரட்டைக்குடியுரிமை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும் நீண்ட காலம் எடுப்பதால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment