ஸ்ரீலசுகட்சி உறுப்பினர்கள் தமக்குள் முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டுள்ள நிலையில் கூட்டாட்சியில் தொடர்வதா இல்லையா என்ற தலைப்பு பேசுபொருளாகியுள்ளது. ஆனாலும் அது அவர்களின் உட்கட்சி விவகாரம் எனவும் அவர்களுக்குத் தேவையான முடிவுகளை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் சட்ட, ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார.
இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சியமைக்கத் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் சு.க விலகத் தீர்மானித்தால் எந்த பாதிப்பும் வரப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிடனான கூட்டை முறித்துக் கொள்ள வேண்டும் என குரூப் 16 ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment