எதிர்வரும் இரு மாதங்களுக்குள் கூட்டாட்சியிலிருந்து விலகி தனித்து ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்காது விடின் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி.
அமைச்சரவை மறு சீரமைப்பும் எதிர்பார்த்த அளவில் இடம்பெறவில்லையெனவும் வெறும் கண்துடைப்பாகவே இருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மேலும் சில முக்கிய உறுப்பினர்களும் தற்சமயம் தனித்தனியாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment