இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றின் அடிப்படையில் இன்று காலை ஈரான் பயணமாகியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
10 பேர் கொண்ட குழுவுடன் அங்கு சென்றுள்ள ஜனாதிபதி, இரு நாட்டு வர்த்தக கூட்டுறவை ஊக்குவிக்கும் அடிப்படையிலான நிகழ்வுகளில் பங்கேற்பதோடு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா மீண்டும் இறங்கியுள்ள நிலையில் இலங்கை தொடர்ந்தும் ஈரானுடன் நட்புறவைப் பேணி வருகின்றமையும் அண்மையில் ஈரானிய சபாநாயகர் இலங்கை விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment