ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான ஒன்று கூடல் நிகழ்வொன்று நேற்று (06) இலங்கை முஸ்லிம்களின் நிர்வாகத்தில் இயங்கும் ஸ்லவ், மஸ்ஜிதுல் ஜன்னாவில் இடம்பெற்றது.
கொஸ்மோஸ் - யுகே ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் சமூக மற்றும் பள்ளிவாசல் அமைப்புகளும் கலந்து கொண்டிருந்ததுடன் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பிலும் தற்கால சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்தும் பங்கேற்றவர்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
ஐக்கிய இராச்சியத்தில் அடுத்த தலைமுறையினருக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் காலை 10 மணி முதல் 4 மணி வரை இடம்பெற்ற
இந்நிகழ்வில் இலங்கை முஸ்லிம்களின் சமூக விவகாரங்கள், அவசியப்படும் வழிகாட்டல்கள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment