தெற்கு லண்டன் பகுதியில் இலங்கை நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக லண்டன் மாநகரின் பல இடங்களில் கத்திக்குத்து, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலன சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற அதேவேளை பின்னணி குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் தெற்கு லண்டன, மிட்சம் பகுதியில் நேற்றைய தினம் அருணேஸ் தங்கராஜா எனும் 28 வயது நபர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமையும் 2000 - 2010 பகுதியில் தமிழ் குழுக்களுக்கிடையில் பரவலான கோஷ்டி மோதல்கள் இடம்பெற்று வந்தமையும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டோரில் அனேகமானோர் திருப்பியனுப்பப் பட்டதன் பின்னணியில் சில காலம் அமைதி நிலவி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் 44 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment