நீண்டகால கட்சித் தாவல் வரலாற்றைக் கொண்ட எஸ்.பி. திசாநாயக்கவுக்கு பிரதமராகும் ஆசை வந்து விட்டதாக தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா.
சமுர்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பாரிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அவர் தொடர்பில் விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் நிரோஷன் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததன் பின்னணியில் எஸ்.பி. தற்போது கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment