தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்க முன் வந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நிராகரித்துள்ளார் வட மாகாண முதல்வர் சி.விக்ணேஸ்வரன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இல்லாவிட்டாலும் தனிக்கட்சியமைத்தேனும் தான் வட மாகாண முதல்வர் பதவிக்கே போட்டியிடப் போவதாக உறுதியாக தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்றில் அமர்வது தமது நோக்கில்லையென தெளிவு படுத்தியுள்ளார்.
உட்கட்சி முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் மாகாண சபை தேர்தலில் விக்ணேஸ்வரன் போட்டியிடுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment