அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் விதத்திலான ஆயத்தங்களில் ஈடுபட்டு வரும் ரணில் விக்கிரமசிங்க, கடந்த தேர்தலில் தம்மோடு இணைந்திருந்த கட்சிகளை மேலும் விரிவு படுத்தி ஐக்கிய தேசிய முன்னணியைப் (UNF) பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக ஐககிய தேசிய முன்னணிக்கு புதிய சின்னம் ஒன்றை அறிமுகப்படுத்தி புத்துணர்ச்சியளிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.
ஆட்சிபீடமேறி மூன்று வருடங்கள் கடந்தும் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது கூட்டாட்சி தத்தளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment