நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பிரதானி டி.ஐ.ஜி ரவி வைத்யலங்காரவின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது.
பூஜித ஜயசுந்தரவின் எதிர்ப்பையும் மீறியே பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 14ம் திகதி இவரது முன்னைய பதவிக்காலம் முடிவடையவிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும், தமது தரப்பு ஆட்சியை நிறுவியதும் முதலாவது நடவடிக்கை FCIDக்கு எதிராகவே என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment