ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றி பிரதமர் பதவியில் தொடர அனுமதித்தது துமிந்த திசாநாயக்கவே என தெரிவித்துள்ள டிலான் பெரேரா, அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் தொடர்ந்தும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுள்ளதுடன் 2020 வரை கூட்டாட்சி தொடரும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே மஹிந்த அணியுடன் இணைந்து கொண்டுள்ள டிலான் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment