களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் வெள்ளம் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.
அவிஸ்ஸாவெல மற்றும் தெரனியகல பகுதியில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் மண் சரிவு, இடி மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment