நாளை முதல் மழை வீழ்ச்சி குறைய வாய்ப்பு: வானிலை அவதான நிலையம் - sonakar.com

Post Top Ad

Saturday 26 May 2018

நாளை முதல் மழை வீழ்ச்சி குறைய வாய்ப்பு: வானிலை அவதான நிலையம்


05Jttfv

நாளை முதல் மழை வீழ்ச்சி குறைவதற்கான வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது வானிலை அவதான நிலையம்.



நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலையால் இதுவரை 16 பேர் உயிரிழந்து ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை வீழ்ச்சி குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் பின்னணியில் நாளை குறைவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment