நாட்டில் மழை வீழ்ச்சி அதிகரித்துள்ள நிலையில் மின்னல் தாக்கியும் மூச்சுத் திணறினாலும் இதுவரை நால்வர் உயிரழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் பௌத்த துறவியொருவர் இன்றைய தினம் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஹொரனயில் இறந்துள்ள அதேவேளை மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வெலிகந்த மற்றும் பொலன்நறுவ பகுதியிலும் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளதுடன் தம்பலாகமத்திலும் ஒருவர் இவ்வாறு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment