பொலிஸ் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி! - sonakar.com

Post Top Ad

Monday 14 May 2018

பொலிஸ் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி!


சூதாட்ட மையம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்ட வேளையில் பொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


களுவல, உரகஸ்மங்ஹந்தியவில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் இவ்வாறு துப்பாக்கி வெடித்ததாகவும் அது திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு இல்லையெனவும் ஸ்ரீலங்கா பொலிஸ் விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment