ஊவா முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார் பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் ஆர். பவானி.
தனது ஆதரவாளர் ஒருவரது குழந்தைக்கு பாடசாலையில் அனுமதி வழங்கவில்லையெனக் காரணம் கூறி, ஊவா முதல்வர் சாமர சம்பத் தசநாயக்க தன்னை முழந்தாழிட நிர்ப்பந்தித்ததன் பின்னணியில் இவ்வாறு அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அண்மையில் சர்ச்சைக்குள்ளான இவ்விவகாரத்தில் தனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லையென குறித்த அதிபர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment