அமெரிக்காவின் ஒரு தலைப்பட்சமான முடிவுக்கமைய ஜெரூசலத்தில் இன்று தூதரகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனர்களின் தொகை 52 ஆக உயர்ந்துள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோர் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களினாலேயே 52 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2400 பேர் வரை காயமுற்றுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக எதிர்ப்பை மீறி அமெரிக்கா ஜெரூசலத்தில் தூதரகத்தைத் திறந்துள்ள அதேவேளை ஐ.நா மற்றும் அரபு நாடுகள் மௌனித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment