அண்மையில் ஹற்றனில் இடம்பெற்ற சிங்கள - தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது பெண்ணொருவர் புத்தரின் முக உருவம் பொறிக்கப்பட்டிருந்த சேலை அணிந்து வந்திருந்த விடயம் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. (தொடர்புபட்ட செய்தி)
இந்நிலையில், குறித்த 'சேலை' தற்போது பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சேலை விற்பனை செய்யப்பட்ட வர்த்தக நிலையமும் பொலிசாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமையும் அங்கு இது போன்று வேறு ஆடைகள் எதுவும் காணப்படவில்லையெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment