யாழ்: கோவிலுக்குள் வைத்து இருவர் மீது வாள்வெட்டு - sonakar.com

Post Top Ad

Tuesday 8 May 2018

யாழ்: கோவிலுக்குள் வைத்து இருவர் மீது வாள்வெட்டு


நீர்வேலியில் இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர்.


நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று  (7)  மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசி (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இதே வேளை  சம்பவம் நடைபெற்ற   கோவில் மண்டபத்தில் குருதிக் கறை அதிகளவாக காணப்பட்டதுடன் அதே இடத்தைச் சேர்ந்த கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறினர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment