அநுரவும் நானும் மட்டுமே பணம் வாங்கவில்லை: ரஞ்சன் - sonakar.com

Post Top Ad

Tuesday 29 May 2018

அநுரவும் நானும் மட்டுமே பணம் வாங்கவில்லை: ரஞ்சன்


அர்ஜுன் அலோசியசிடமிருந்து தானும் ஜே.வி.பி தலைவர் ரஞ்சன் ராமநாயக்கவும் மாத்திரமே பணம் வாங்கவில்லையென தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.



அலோசியசிடம் பணம் வாங்கிய 118 பேரில் அனைத்து மதங்களையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ள அவர், தயாசிறியை கண்டிக்கத் தவறுபவர்கள் அந்த பட்டியலுக்குள் அடங்குபவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர 1 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியானதையடுத்து தான் மாத்திரமன்றி 118 பேர் இவ்வாறு பணம் பெற்றதாக தயாசிறி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment