மஹிந்த ராஜபக்சவின் ஏற்பாட்டில் இன்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம்க் காங்கிரசின் தலைவர் ஹக்கீம், பௌசி,ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் அரசியல் வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
காலியில் பசில், பேருவளையில் கோத்தாபே ராஜபக்சவும் இப்தார் நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில் தமது ஆட்சி மீண்டும் மலர்ந்தால் முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் இன்றி வாழலாம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment