பலஸ்தீன இளைஞனைக் கொல்வதை வீடியோ எடுத்தவர் பிணையில் விடுதலை! - sonakar.com

Post Top Ad

Tuesday 8 May 2018

பலஸ்தீன இளைஞனைக் கொல்வதை வீடியோ எடுத்தவர் பிணையில் விடுதலை!


பலஸ்தீன இளைஞனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை வீடியோவாகப் பதிவு செய்து அதனை வெளியிட்டுக் குதூகலித்த நபர் இன்று சில மாத கால சிறைத்தண்டனைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


2016ம் ஆண்டு அப்துல் பதாஹ் என அறியப்பட்ட பலஸ்தீன இளைஞனைக் கொலை செய்வதையே எலர் அசரயா என அறியப்படும் இஸ்ரேலிய சிப்பாய் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் எழுந்த விமர்சனங்களையடுத்து கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது 9 மாதங்களில் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment