கொழும்பில் தினசரி 600 மெற்றிக் தொன் கழிவுகள் சேர்வதாக தெரிவித்துள்ளர் மேயர் ரோசி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புத்தளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய தளத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
முத்துராஜவெலவில் பிரிக்கப்படாத கழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையெனவும், கழிவுகளைப் பிரிப்பதற்கென பாரிய மனித வலு அவசியப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ள அவர், தினசரி 50 மெற்றிக் தொன் கழிவுகள் இவ்வாறு பிரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் கழிவகற்றும் பணி பாரிய தேக்க நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment