ஈரானால் மத்திய கிழக்கு அமைதிக்குப் பங்கம்: அமெரிக்கா - sonakar.com

Post Top Ad

Saturday 12 May 2018

ஈரானால் மத்திய கிழக்கு அமைதிக்குப் பங்கம்: அமெரிக்கா



ஈரான் மத்திய கிழக்கின் அமைதிக்குப் பெரும் பங்கமாக இருப்பதாக தெரிவிக்கிறது அமெரிக்கா.

தம்மை அணு ஆயுதம் கொண்டு தாக்கும் வல்லமையைப் பெற்றுள்ள வடகொரியாவுடன் தற்போது நட்புறவை வளர்த்துக் கொண்டுள்ள அமெரிக்கா, ஈரானைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.



இவ்விவகாரத்தில் சவுதி - இஸ்ரேல் ஒரே நிலைப்பாட்டில் உள்ள அதேவேளை ட்ரம்பின் அழுத்தத்தினால் ஏலவே கட்டார் - சவுதி கூட்டணி பிளவுற்றுள்ளது.

இந்நிலையில், ஈரானுடனான அணு ஒப்பந்தத்தையும் முறித்துக் கொண்டுள்ள அமெரிக்கா மத்திய கிழக்கில் இஸ்ரேலைப் பலப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment