ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்த வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா, அவரை நேரில் சந்தித்து தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பொறுப்பேற்றதும் பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் சரத் பொன்சேகாவை பதவி நீக்க வேண்டும் என சு.க தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்திருந்தது.
இந்நிலையில், தமது கட்சி உறுப்பினர்கள் சிலர் சகிதம் ஜனாதிபதியை அணுகி தனது கருத்துக்களால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் வருத்தம் தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.
No comments:
Post a Comment