
இரத்மலானை பொருபன வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையமான ஹமீதியாசின் களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பாகவே அங்கு புதிய கையிருப்புகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இத்தீவிபத்து ஏற்பட்டுள்ள அதேவேளை தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது குறித்து நிறுவன உரிமையாளர்களிடமும் உறுதியான தகவல்கள் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவிரோத நடவடிக்கைகள் சற்று ஓய்வு பெற்றுள்ள நிலையில் மீண்டும் எங்காவது ஆரம்பமாகக்கூடும் எனும் அச்சம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment