நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கான நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மைய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நிவாரண உதவிகளை துரிதப்படுத்தும்படி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment