மழை, காற்று மற்றும் மின்னலினால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 30 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதேவேளை கொழும்பு, களனி, பியகம, ருவன்வெல்ல, ஹங்வெல்ல பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் 633 வீடு மற்றும் வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment